செய்திகள் :

எல்லா பாடங்களிலும் FAIL... தேர்வெழுதிய மாணவிக்கு அதிர்ச்சி - 10th தேர்வு முடிவில் நடந்த குளறுபடி!

post image

குஜராத் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்த்து அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளார்.

அகிக்ஷா பர்மர் என்ற பத்தாம் வகுப்பு மாணவி அனைத்து தேர்வுகளையும் எழுதி இருந்த நிலையில், அவர் ஆப்சென்ட் ஆகி தேர்வில் தோல்வி அடைந்ததாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

students
students

இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை திரத்சிங் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனது மகள் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் என பதிவிட்டு தேர்வில் தோல்வி அடைந்ததாக முடிவுகள் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

எனது மகளை ஒவ்வொரு தேர்விற்கும் தேர்வு மையத்தில் இறக்கிவிட்டது நான்தான். அவர் எல்லாத்  தேர்வுகளையும் முறையாக எழுதி உள்ளார். ஆனால் இது போன்று நடப்பது எப்படி சாத்தியம்? இதற்கு முறையாகக்  கல்வித்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்த நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது, மாணவி அனைத்து பாடங்களுக்கானத்  தேர்வுகளையும் எழுதி இருப்பது உறுதியானது.

இதனால் சோட்டா உதேபூர் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆனந்த் பர்மர், தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட ஆறு பேருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

representation images
representation images

இது போன்ற அஜாக்கிரதையானச்  செயலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அகிக்ஷா பர்மர் என்ற மாணவியின் தேர்வு முடிவுகள் சரிபார்க்கப்பட்டு, சில நாட்களில் சரியான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபடும் என்று கல்வித்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"மராத்தியில் பேசினால்தான் பணம்" - டெலிவரி பாய்யிடம் வாக்குவாதம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சமீபகாலமாக மும்பையில் அரசு அலுவலகம், வங்கியில் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மராத்தி பேசாத வங்கி அதிகாரியை வங்கிக்குள் சென்று அடித்து உதைத்... மேலும் பார்க்க

”செல்போன் எடுத்துச் செல்லவில்லை..”- ஆனால் கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞருக்கு தீ காயம் - எப்படி?

வீட்டில் உள்ள கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவின் செக்டார் 36 இல் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழக்கம்போல ... மேலும் பார்க்க

பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும்... மேலும் பார்க்க

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க

Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்டா ஹக்கீம்?

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சம... மேலும் பார்க்க

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்... மேலும் பார்க்க