செய்திகள் :

போக்ஸோ வழக்கு: மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்!

post image

போக்ஸோ வழக்கில் கைதான மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மத பாடல்கள் மூலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் கோவையைச் சேர்ந்த கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ்.

கடந்த 2024-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஜான் ஜெபராஜ் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளாா். அப்போது அந்த நிகழ்வில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின்பேரில், மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜ் கேரள மாநிலம் மூணாறில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போக்ஸோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: மெட்ரோ ரயில்: அயனாவரம் - பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறை!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தையுடன் பயணிக்கும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 1.39 லட்சம் பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெ... மேலும் பார்க்க

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவ... மேலும் பார்க்க

போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அரசு அழைப்பு

போட்டித் தேர்வுக்காக இலவசப் பயிற்சி தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் சேர்ந்து பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதா... மேலும் பார்க்க

ஓடும் பேருந்திலிருந்து குழந்தை தவறிவிழுந்து பலி: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்திலிருந்து 9 மாதக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்... மேலும் பார்க்க

இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் காலமானார்

தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் இன்று (மே 14) காலமானார்.சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய நகர் பகுதியில் வெங்கடாசலம் (வயது 90) வசித்து வந்தார். இதனிடையே வய... மேலும் பார்க்க