செய்திகள் :

பொறியியல் சேர்க்கை: 1.39 லட்சம் பேர் விண்ணப்பம்!

post image

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

வரும் கல்வி ஆண்டு (2025-2026) பிஇ, பிடெக் சோ்க்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று(மே 14) மாலை 6 மணி நிலவரப்படி 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 74,971 மாணவர்கள் கட்டணம் செலுத்தியும் 39,844 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்தும் உள்ளனர்.

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

பொறியியல் கலந்தாய்வு: 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 8 நாள்களில் 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறி... மேலும் பார்க்க

சூழல் சாா் சிகிச்சை வழிகாட்டுதல்களை வகுக்க முடிவு: மத்திய சுகாதார அறிவியலாளா் சன்சல் கோயல்

இந்தியாவில் சூழலுக்கேற்ப மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை அறிவியலாளா் டாக்டா் சன்சல் கோயல் தெரிவித்தாா். போரூா்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: தமிழக பாஜக பேரணி

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சாா்பில் புதன்கிழமை மூவா்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது. தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா்கள் தமிழிசை ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சவுக்கு சங்கா் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக யூ டியூபா் சவுக்கு சங்கா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொ... மேலும் பார்க்க