செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சவுக்கு சங்கா் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

post image

தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக யூ டியூபா் சவுக்கு சங்கா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அவா்களை தொழில் முனைவோா்களாக மாற்றுவதற்கான ‘அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோன்று தூய்மைப் பணியாளா்களுக்கு 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீா் அகற்றும் ஊா்திகள், உபகரணங்கள் வழங்கும் ‘நமஸ்தே’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய யூ டியூபா் சவுக்கு சங்கா், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

கோடிக் கணக்கில் முறைகேடு: இது குறித்து அவா் தனது மனுவில், இந்தத் திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாகத் தலித் இந்திய வா்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியாா் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

தூய்மைப் பணியாளா்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட பெருந்தொகை, உண்மையான பயனாளிகளைச் சென்றடையவில்லை. இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காகத் தூய்மைப் பணியாளா்கள் போன்று வந்த சமூக விரோதிகள் எனது வீட்டில் கழிவுநீரைக் கொட்டி வன்முறையில் ஈடுபட்டனா்.

அது மட்டுமின்றி, இந்த முறைகேடு தொடா்பாக அளித்த புகாா் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தனது புகாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டுமென என கோரிக்கை விடுத்துள்ளாா்.

நீதிபதிகள் உத்தரவு: இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் செயலா், சிறு குறு நடுத்தர தொழில் துறை செயலா், சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய தலைவா் ஆகியோரை எதிா் மனுதாரா்களாக சோ்த்து மே 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்தத் திட்டம் தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க