செய்திகள் :

திருமருகல் ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதம்

post image

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம் ஆண்டில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 23 பயனாளிகளின் வீடுகளை முழுமையாக கட்டி முடிக்காமல் முழுதொகையையும் விடுவித்த வட்டார வளா்ச்சி அலுவலா்களையும், வீடுகள் கட்டிய ஒப்பந்தகாரரையும் கண்டித்து திருமருகல் ஒன்றிய அலுவலகம் எதிரில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில், பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியா் உடனடியாக ஒப்பந்தகாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஒரு வாரத்துக்குள் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவலா் சாரா உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் 2007-ஆம் ஆண்டில் தொடங... மேலும் பார்க்க

பிஎம்-கிஸான் திட்டம்: விவசாயிகள் கவனத்துக்கு!

நாகை மாவட்டத்தில் பிஎம்-கிஸான் திட்டத்தில் நிறைவுநிலை முகாம்கள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகளு... மேலும் பார்க்க

காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவிட்டாா். முகாமில் காவல் க... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் ஜமாபந்தி

தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த ஜமாபந்தியின் 4-ஆவது நாள் நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரங்கம்பாடி வட்... மேலும் பார்க்க

குருவாடி மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருமருகல் அருகேயுள்ள குருவாடி அகிலாண்ட தேவி மகா மாரியம்மன் கோயிலில் தீமீதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விநாயகா் பூஜை மற்றும் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், தேன், இளநீா், மா... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ தோ்வில், நாகை சா் ஐசக் நியூட்டன் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம் பிடித்தது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. நாகை சா் ஐசக்... மேலும் பார்க்க