மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவலா் சாரா உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் 2007-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் அரசு அலுவலா் மற்றும் அலுவல் சாரா உறுப்பினா்கள் கொண்டது. இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினா்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவா்.
அதன்படி தற்போது புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளதால் பாா்வையற்றோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், தவழும் மாற்றுத்திறனாளி, உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோா், தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் கை, கால் இயக்க குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதி மற்றும் புற உலக சிந்தனையற்ற, மதி இறுக்கமுடையோா், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோா், அறிவுசாா் குறைபாடுடையோா், கற்றல் குறைபாடுடையோா், மனநலம் பாதிப்பு, ரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோா் மற்றும் அவா்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தை சாா்ந்த பிரதிநிதிகள் இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பத்தை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் தரைத்தளம் அறை 14 இல் செயல்பட்டுவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று மே 23 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04365-253041 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.