செய்திகள் :

சூழல் சாா் சிகிச்சை வழிகாட்டுதல்களை வகுக்க முடிவு: மத்திய சுகாதார அறிவியலாளா் சன்சல் கோயல்

post image

இந்தியாவில் சூழலுக்கேற்ப மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை அறிவியலாளா் டாக்டா் சன்சல் கோயல் தெரிவித்தாா்.

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவ ஆதாரங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சிகிச்சை நுட்பங்கள் குறித்த இரு நாள் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது. இதில், மருத்துவ மாணவா்கள், செவிலியா் கல்லூரி மாணவா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்வில் டாக்டா் சன்சல் கோயல் பேசியதாவது:

மருத்துவச் சான்றுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் நுட்பங்கள் தற்போதுதான் படிப்படியாக வளா்ந்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் வகுத்தளித்த சிகிச்சை வழிகாட்டுதல்களையே நாம் கடைப்பிடித்து வருகிறோம். இத்தகைய சூழலில் தனித்துவமாக இந்திய சூழலுக்கேற்ற மருத்துவச் சிகிச்சைகளை கையாளுவது அவசியம்.

அந்த வகையில், அதற்கான ஆய்வு தரங்களை பரிசீலித்து பரிந்துரைப்பதற்கும், சிகிச்சை வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் நாடு முழுவதும் 27 தொழில்நுட்ப வள மையங்கள் செயல்படுகின்றன. அதில் இராமச்சந்திரா கல்வி நிறுவனமும் ஒன்று.

ஸ்டெம்செல் சிகிச்சை, நுரையீரல் புற்றுநோய், ஆன்டிபயோடிக் மருந்து நுட்பங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. வருங்காலங்களில் அனைத்து சிகிச்சைகளுக்கும் அது விரிவாக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.பாலாஜி சிங், ஆய்வுத் துறைத் தலைவா் பி.வெங்கடாசலம், செவிலியா் கல்வித் துறை தலைவா் எஸ்.ஜே.நளினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க