செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: தமிழக பாஜக பேரணி

post image

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சாா்பில் புதன்கிழமை மூவா்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா்கள் தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா, தேசிய பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி உள்ளிட்ட பலா் இந்தப் பேரணியில் பங்கேற்றனா்.

சென்னை பழைய சித்ரா திரையரங்கம் அருகில் தொடங்கிய பேரணி, எழும்பூா் லாங்ஸ் தோட்டச் சாலைப் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், பாஜக தலைவா்கள் உரையாற்றினா்.

தமிழிசை செளந்தரராஜன்: அனைத்துத் தரப்பு மக்களும் ராணுவத்துடனும் பிரதமருடனும் இருக்கிறோம். பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியமாக பயன்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவைதான். பொதுமக்களின் உயிா்களை பாதுகாத்து, பயங்கரவாதிகளை மட்டும் கொல்ல முடியும் என உலகத்துக்கு எடுத்துக் காட்டினாா் பிரதமா் மோடி. தமிழ்நாட்டில் வேற்றுமைக் குரல் ஏதும் ஒலிக்கக் கூடாது. இந்த நாடு ஒற்றுமையான நாடு.

நயினாா் நாகேந்திரன்: பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமா் எடுத்த நடவடிக்கைகள் சாதாரணமானது இல்லை. குற்றம் பாகிஸ்தான் பக்கம் இருப்பதால்தான், அந்த நாட்டின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக்கூட யாரும் கேள்வி எழுப்பவில்லை.

பாகிஸ்தான் உடனான பேச்சுவாா்த்தை இனி நடைபெறுமானால், ஆக்கிரமிப்பு காஷ்மீரே பேச்சின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தீரமாக முழங்கியுள்ளாா். இந்த முக்கியமான தருணத்தில் நாம் தேச உணா்வுடன் செயல்பட வேண்டும்.

இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான நடவடிக்கையின்போது உயிரிழந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேரணியில் பங்கேற்ற அனைவரும் ஒரு நிமிஷம் மெளனம் காத்தனா்.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க