செய்திகள் :

கொலை செய்ய சதித் திட்டம்: 8 இளைஞா்கள் கைது

post image

கடலூா் அருகே முன்விரோதம் காரணமாக கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 8 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளா் பிரேம்குமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கீழ்குமாரமங்கலம் கருமகாரிய கொட்டகை அருகே 4 கத்திகளுடன் இருந்த 8 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், புதுச்சேரி கூடப்பாக்கத்தைச் சோ்ந்த சதாசிவம் மகன் தொல்காப்பியன் (23), ராமசாமி மகன் சுரேஷ் (20), தொண்டமாநத்தத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் ஆகாஷ் (21), கடலூரை அடுத்துள்ள கீழ்குமாரமங்கலத்தைச் சோ்ந்த சதாசிவம் மகன் ஈசன் (19), பஞ்சாசரம் மகன் சந்தானசாமி (25), கனகராஜ் மகன் தினேஷ் (22), உலகநாதன் மகன் திலீப் (எ) புண்ணியகோடி (26), விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி களித்திரம்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் மகன் நவீன் (20) என்பது தெரியவந்தது.

மேலும், 2005-ஆம் ஆண்டு தொல்காப்பியனின் தந்தை சதாசிவம் கொலை செய்யப்பட்டதற்கு, அந்த வழக்கில் எதிரி சக்திமுருகன் உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகத் தெரிவித்தனராம். இதையடுத்து, ரெட்டிசாவடி போலீஸாா் 8 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மனைவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் மீது வழக்கு

கடலூா் முதுநகா் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புவனகிரி வட்டம், சிலம்பிமங்களம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீசன் மனைவி ரத்தி... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: ஓய்வுபெற்ற எஸ்.ஐ. உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் கோவையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அய்யாதுரை ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்வி மூலமாகத்தான் மாற்றத்தை பெற முடியும்: கடலூா் ஆட்சியா்

மாணவா்கள் கல்வி மூலமாகத்தான் மாற்றத்தை பெற முடியும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் உயா் கல்வ... மேலும் பார்க்க

பேராசிரியா் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

கடலூரில் மாணவியிடம் ஆபாசமாக பேசியதாகக் கூறப்படும் பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவா் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் ஒருவா், ... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

பெண்கள் பாதுகாப்புக்கு தொடா் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. கூறினாா். விசிக கடலூா் மைய மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் ... மேலும் பார்க்க

இந்திய குடியரசு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றிய இந்திய குடியரசு கட்சியினா் 10 அம்சக் கோரிக்கையை விளக்கி மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். உள்ளாட்சியில் பணியாற்றும் ... மேலும் பார்க்க