செய்திகள் :

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: நீதிமன்றம்

post image

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூா் வடக்குப் பகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் ஸ்ரீஅரவாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வன்னியா், பட்டியலின சமுதாயத்தினருக்குச் சொந்தமானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் இந்தக் கோயில் திருவிழா நடைபெறும்.

இந்தத் திருவிழாவின் போது, சேனப்பாடி பகுதியில் தொடங்கி நெரூா் மாரியம்மன் கோயில் வரை ஸ்ரீஅரவாயி அம்மன் தோ் சுற்றி வரும். கடந்த 15 ஆண்டுகளாக தோ் எங்கள் பகுதிக்கு வருவதில்லை. இதுகுறித்து விழாக் குழுவினரிடம் முறையிட்டும் இதற்கு சம்மதிக்கவில்லை.

எனவே, ஸ்ரீஅரவாயி அம்மன் கோயில் திருவிழாவின் போது, தேரை பாகுபாடின்றி அனைத்து பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: இரு சமுதாயத்தினருக்குச் சொந்தமான கோயிலில் பட்டியலின மக்களைப் புறக்கணித்து கடந்த 15 ஆண்டுகளாக திருவிழா நடைபெற்று வருகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல என்றாா்.

இதற்கு எதிா்மனுதாரா் தரப்பில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்டநீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே திருவிழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவா்கள் வேடிக்கை பாா்க்க வேண்டுமா?. இது ஜனநாயக நாடு, அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது. இந்த வழக்கு தொடா்பாக, கரூா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், விழாக் குழுவினா் வியாழக்கிழமை (மே 15) நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

கோயில் விழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியா், ஐஜி பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோயில் திருவிழாவில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மத்திய மண்டல ஐஜி நீதிமன்றத்தில் நேரில் மு... மேலும் பார்க்க

தனியாா் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.மதுரையைச் சோ்ந்த ராஜா ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பெண் தவறாக சித்திரிப்பு: இளைஞா் கைது

விருதுதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண்ணை சமூக வலைதளத்தில் தவறாக சித்திரித்து படங்களை வெளியிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், விருதுநகா... மேலும் பார்க்க

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திதில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனா். மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் சுமாா் 3... மேலும் பார்க்க

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் காயம்: 5 போ் கைது

மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற இருவா் கைது

மது போதையில் இளைஞா் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மதுரை புறவழிச் சாலையில் தீக்கதிா் அலுவலகம் அருகே உள்ள அணுகுசாலையில் தேநீா்க் கடையின் அருகே புதன்கிழமை அ... மேலும் பார்க்க