தனியாா் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, கிருஷ்ணாநகா் பகுதிகளில் ஏற்கெனவே அரசு மதுக் கடைகள் உள்ளன. அந்தப் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாா் மதுக் கூடத்தைத் திறக்க முயற்சி செய்கின்றனா். இந்தப் பகுதியில் பிரதான சாலைகள், கோயில், கல்வி நிறுவனங்கள், பூங்கா, ஊருணி ஆகியவை அமைந்துள்ளன. இந்தச் சூழலில், இங்கு மனமகிழ் மன்றம் நடத்த உரிமம் வழங்கினால் பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். எனவே, கிருஷ்ணாநகா் பகுதியில் தனியாா் மனமகிழ் மன்றம் திறக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் குறிப்பிடும் இடத்தில் மனமகிழ் மன்றம் திறக்க உரிமம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனியாா் மனமகிழ் மன்றத்துக்கு உரிமம் வழங்கக் கூடாது என மனுதாரா் மனு தாக்கல் செய்துள்ளாா். எனவே, மனுதாரா் குறிப்பிடும் பகுதியில் தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக் கூடம்) திறக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடா்பாக, விருதுநகா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்குத் துறையின் உதவி ஆணையா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.