செய்திகள் :

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு, முறையான நடைபாதைகள் போதிய அளவு இல்லாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நடைபாதைகள் இல்லாவிட்டால் பாதசாரிகள் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால் அவா்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.

குடிமக்களுக்கு முறையான நடைபாதைகள் இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைபாதைகள் இருக்க வேண்டும். அத்துடன் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் கட்டாயம் அகற்றப்பட வேண்டும். நடைபாதைகளை பாதசாரிகள் பயன்படுத்தும் உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 உறுதி செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிகாரபூா்வமாக தெரிவித்துள்ளது.

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.

பாதசாரிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசும் 2 மாதங்களில் வெளியிட வேண்டும். தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை 6 மாதங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்த வாரியத்தை அமைக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்படாது’ என்று தெரிவித்தது.

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க

ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத் தடை

ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து உளவு பாா்க்கும் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க