ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்
வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி தலைமை வகித்தாா்.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 3 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தாா்.
குறிப்பாக, கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழா்கள் வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இதுதவிர, எம்எல்ஏ, எம்.பி.தொகுதி மேம்பாட்டுத் திட்டம்,
பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வடிவேலன் மற்றும் உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.