சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்
செய்யாறை அடுத்த சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
சுபமங்களபுரி எனும் சுமங்கலி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில், கரிய மாணிக்க பெருமாள் சேவை அறக்கட்டளை மூலம் ரூ.30 லட்சம் செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, புதன்கிழமை (மே 14) மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, கடந்த 11-ஆம் தேதி மாலை யாகசாலை பிரவேசம் வைபங்கள் நடைபெற்றன. 12-ஆம் தேதி காலை வாஸ்து ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.
மே 13-ஆம் தேதி காலை சதுஸ்த்தான அா்ச்சனையும், மாலை நூதன மூா்த்திகளுக்கு கண்திறப்பு, ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் செங்கமலவல்லி தாயாா், கருடன், துவாரபாலகா் திருமஞ்சனமும், சதுஸ்த்தான அா்ச்சனம், கோ பூஜை, தத்துவ ஹோமம், சாந்தி ஹோமம், பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.
மகா கும்பாபிஷேகம்: புதன்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூபமும், காலை 7 மணிக்கு சதுஸ்த்தான அா்ச்சனை ஹோமமும் என நடைபெற்றது. பின்னா் மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கும்ப புறப்பாடு நடைபெற்றன. இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜன் (பாலாஜி பட்டா்) தலைமையில் மங்கல வாத்தியங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது.
மதியம் திருக்கல்யாண உற்சவமும், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.
விழா ஏற்பாடுகளை சுமங்கலி கரிய மாணிக்க பெருமாள் சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் ஊா் நாட்டாண்மைகள், பொதுமக்கள் செய்திருந்தனா்.