செய்திகள் :

2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!

post image

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 2வது முறையாக அவரைச் சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப் பயணமாக கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளார். அவரைச் சந்திக்க ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி அந்நாட்டு தோஹா நகருக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தோஹாவிலுள்ள லுசைல் மாளிகையில் கத்தார் மன்னர், அதிபர் டிரம்ப்-க்கு இன்று (மே 14) அளிக்கும் அரசு விருந்தில் முகேஷ் அம்பானியும் கலந்துக்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் மிகப் பெரியளவில் அம்பானியின் நிறுவனங்களின் மீது முதலீடு செய்துள்ளன.

இத்துடன், வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. ஆனால், தென் அமெரிக்க நாடுகளிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது அதிபர் டிரம்ப் 25 சதவிகிதம் வரி விதித்ததினால் மார்ச் மாதம் அந்த இறக்குமதி நிறுத்தப்பட்டது.

அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அம்பானியின் டிஜிட்டல் முயற்சிகளில் பங்குகளை வாங்கியுள்ளன.

முன்னதாக, அம்பானி குடும்பம் அதிபர் டிரம்ப்-ன் குடும்பத்துடன் நெருங்கிய உறவை பகிர்ந்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும், பதவியேற்புக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விருந்தாளிகளுக்கு டிரம்ப் வழகிய விருந்தில் அம்பானி குடும்பம் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிக... மேலும் பார்க்க

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர். சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயல... மேலும் பார்க்க

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீ... மேலும் பார்க்க

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின... மேலும் பார்க்க

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும... மேலும் பார்க்க