செய்திகள் :

"மராத்தியில் பேசினால்தான் பணம்" - டெலிவரி பாய்யிடம் வாக்குவாதம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

சமீபகாலமாக மும்பையில் அரசு அலுவலகம், வங்கியில் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மராத்தி பேசாத வங்கி அதிகாரியை வங்கிக்குள் சென்று அடித்து உதைத்தனர்.

இப்போது மராத்தி பிரச்னையால் உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை பாண்டூப் பகுதியில் பீட்சா டெலிவரி செய்வதற்காகச் சென்ற நபரிடம் ஒரு தம்பதி மராத்தியில் பேசினால்தான் பணம் கொடுப்போம் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.

பிட்சா
பிட்சா

ரோஹித் என்ற அந்த வாலிபர் பீட்சா டெலிவரிக்காக மும்பை பாண்டூப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றார். அங்கு இருந்த தம்பதியிடம் பீட்சாவை டெலிவரி செய்வதற்காக வந்தார்.

ஆனால் அவர் மராத்தியில் பேசாமல் இந்தியில் பேசினார். தம்பதி மராத்தியில் பேசினால்தான் பீட்சாவை வாங்கிக்கொண்டு பணம் கொடுப்போம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.

அத்தம்பதி கதவை முழுமையாகத் திறக்காமல் கிரில் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருந்து கொண்டு பேசினர்.

மராத்தி தெரியவில்லையெனில் ஏன் அதனைப் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று ரோஹித் தெரிவித்தார்.

அதற்கு நீ மும்பையில் இருப்பதால் மராத்தி பேச வேண்டும் என்று அப்பெண் தெரிவித்தார்.

மராத்தியில் பேச வேண்டும் என்று யார் சொன்னது என்று ரோஹித் கேட்டார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

"இது போன்று நிபந்தனை விதித்தால் இனிமேல் ஆர்டர் செய்யாதீர்கள். நீங்கள் பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. பீட்சாவில் எதாவது பிரச்னை இருந்தால் சொல்லுங்கள்" என்று ரோஹித் தெரிவித்தார்.

சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா

இருவரும் பேசுவதை ரோஹித் தனது மொபைல் போனில் பதிவு செய்தார். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு உங்களை வீடியோ எடுக்கவில்லை என்றும், சத்தத்தை மட்டுமே பதிவு செய்வதாக ரோஹித் தெரிவித்தார்.

இறுதியில் அத்தம்பதி பீட்சாவிற்குப் பணம் கொடுக்கவில்லை. ரோஹித் பணம் வாங்காமலேயே சென்றுவிட்டார்.

இது குறித்து பீட்சாவை அனுப்பிய டோமினோஸ் நிர்வாகம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரோஹித் அத்தம்பதியுடன் பேசிய பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

எல்லா பாடங்களிலும் FAIL... தேர்வெழுதிய மாணவிக்கு அதிர்ச்சி - 10th தேர்வு முடிவில் நடந்த குளறுபடி!

குஜராத் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு தேர்வு ம... மேலும் பார்க்க

”செல்போன் எடுத்துச் செல்லவில்லை..”- ஆனால் கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞருக்கு தீ காயம் - எப்படி?

வீட்டில் உள்ள கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவின் செக்டார் 36 இல் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழக்கம்போல ... மேலும் பார்க்க

பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும்... மேலும் பார்க்க

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க

Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்டா ஹக்கீம்?

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சம... மேலும் பார்க்க

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்... மேலும் பார்க்க