செய்திகள் :

வெளிநாடுகளில் பிச்சையெடுத்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தல்!

post image

2024-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பிச்சையெடுப்பில் ஈடுபட்ட சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பிச்சையெடுத்ததாகப் பிடிபட்ட சுமார் 5,402 பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாக பாகிஸ்தானின் உள் துறை அமைச்சகம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சௌதி அரேபியா, ஈராக், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் தங்களது நாட்டில் பிச்சையெடுத்த பாகிஸ்தானியர்களைத் திருப்பி அனுப்பியுள்ளன.

இதனால், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4,850 பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில், 4,498 பேர் சௌதி அரேபியாவிலிருந்தும் அதற்கு அடுத்ததாக 242 பேர் ஈராக்கிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் 55 மற்றும் 49 பேரைத் திருப்பி அனுப்பியுள்ளன. இந்நிலையில், 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் பல்வேறு நாடுகளுக்கு சென்று பிச்சையெடுத்த சுமார் 552 பாகிஸ்தானியர்கள் தாயகம் அனுப்பப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பாகிஸ்தானில் அதிகரிக்கும் மக்கள் தொகையினாலும், அங்கு நிலவும் வேலையின்மை, வறுமை ஆகிய காரணங்களினால் அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் வேலைத் தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

ஆனால், அங்கு அவர்கள் சமாளிக்கும் பல இன்னல்களினால் இறுதியில் அங்கு பிச்சையெடுத்து சம்பாரிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை அரசு சம்மன்!

கனடாவில் புதியதாகத் திறக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அந்நாட்டிலி... மேலும் பார்க்க

பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை: சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு

பாகிஸ்தானிடமிருந்து பலோசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலோச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தன்னுடைய எக... மேலும் பார்க்க

போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

உலகில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளில் போர்நிறுத்தம் கொண்டு வர அந்நாட்டு தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என புதிய போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார்.முன்னாள் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்... மேலும் பார்க்க

அதிகாலையில் காஸாவின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்! 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலி!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 14) அதிகாலை நடத்திய ... மேலும் பார்க்க

கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி

கத்தார் அளிக்கும் பல கோடி மதிப்பிலான போயிங் விமானத்தை, தான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது முட்டாள்தனம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிந்துகொண்டுள்ளார்.அமெரிக்க அரசோ அல்லது அதிபருக்கோ, வெளிந... மேலும் பார்க்க

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க