செய்திகள் :

அதிகாலையில் காஸாவின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்! 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலி!

post image

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 14) அதிகாலை நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் 60 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் சுமார் 22 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்க - இஸ்ரேலிய பிணைக் கைதியான இளைஞர் ஒருவரை ஹமாஸ் படையினர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி ஒப்படைத்ததற்கு மறுநாளே நடைப்பெற்றுள்ளன.

இந்தத் தொடர் தாக்குதல்களினால் கான் யூனுஸ் பகுதியில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டனர். ஜபாலியா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான குழந்தைகளின் உடலகளை மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.

இருப்பினும், குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹமாஸ் படைகளின் கட்டுமானங்கள் உள்ளதினால் ஜபாலியா பகுதியிலுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு நேற்று (மே 13) இரவு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்திய சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், காஸாவினுள் உணவுப் பொருள்கள், மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் நுழைவதை இஸ்ரேல் முடக்கியுள்ளது.

இதனால், லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பசியில் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு கடுமையாக கண்டித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் கிளர்ச்சிப்படை இடையிலான போரில் சுமார் 52,800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை அரசு சம்மன்!

கனடாவில் புதியதாகத் திறக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அந்நாட்டிலி... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் பிச்சையெடுத்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தல்!

2024-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பிச்சையெடுப்பில் ஈடுபட்ட சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று அங்கு ... மேலும் பார்க்க

பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை: சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு

பாகிஸ்தானிடமிருந்து பலோசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலோச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தன்னுடைய எக... மேலும் பார்க்க

போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

உலகில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளில் போர்நிறுத்தம் கொண்டு வர அந்நாட்டு தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என புதிய போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார்.முன்னாள் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்... மேலும் பார்க்க

கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி

கத்தார் அளிக்கும் பல கோடி மதிப்பிலான போயிங் விமானத்தை, தான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது முட்டாள்தனம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிந்துகொண்டுள்ளார்.அமெரிக்க அரசோ அல்லது அதிபருக்கோ, வெளிந... மேலும் பார்க்க

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க