செய்திகள் :

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

post image

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனால், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் கடுமையான ராணுவ மோதல்கள் நடைபெற்றன.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கி வருகின்றார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மதிப்பாய்வு செய்தனர். அவர்களின் பரிந்துரைகளின்படி அவருக்கு வழங்கப்பட்ட ‘இசட்’ பிரிவு பாதுகாப்புப் பேரணியில் புதியதாக தற்போது இரண்டு குண்டு துளைக்காத வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற மதிப்பாய்வின் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட ‘வொய்’ பிரிவு பாதுகாப்பு ‘இசட்’ பிரிவாக உயர்த்தப்பட்டது.

மத்திய ரிசர்வ் காவல் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவினர் அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்தப் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட 200 முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2 வது முறையாக அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் முகேஷ் அம்பானி!

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிக... மேலும் பார்க்க

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர். சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயல... மேலும் பார்க்க

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீ... மேலும் பார்க்க

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின... மேலும் பார்க்க

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும... மேலும் பார்க்க