செய்திகள் :

சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி

post image

சின்னதடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை வேகமாக கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் செல்போன் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு வீடுகளில் வைத்திருக்கும் உணவுப் பொருள்கள், தோட்டத்தில் கால்நடைகளுக்கு வைத்திருந்த தீவனங்கள் மற்றும் விவசாய பயிர்களை உண்டு சேதப்படுத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் வளாகத்தில் இருக்கும் கடைகள் மற்றும் உணவு கூடங்களுக்கு வரும் ஒற்றைக் காட்டு யானை உணவுப் பொருள்களை உண்டு சேதப்படுத்தி வந்தது. இதனால் பக்தர்களை பாதுகாக்க வனத்துறையினர் நரசிம்மன் மற்றும் சின்னத்தம்பி என்ற இரண்டு கும்கி யானைகளை அங்கு நிறுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த பகுதியில் கடைகளை சேதப்படுத்தி வந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு வருவதில்லை, இதனால் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை காலை சின்ன தடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை அவசர அவசரமாக கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் கைப்பேசி விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாய நிலங்களுக்கு இரவு நேரங்களில் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல் என்றுமே எங்களுடைய பகுதி: சீனாவுக்கு இந்தியா பதில்

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு 'அபத்தமான' முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும... மேலும் பார்க்க

‘ஜி’ லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!

நியூயார்க்: உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தேடுபொறி 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய கூகுள் லோகோவில் பெரியளவிலான மாற்ற... மேலும் பார்க்க

கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!

திருச்சி: திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி திருவெறும்பூர... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம் ம... மேலும் பார்க்க

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், ... மேலும் பார்க்க

மே 16-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நில... மேலும் பார்க்க