செய்திகள் :

அருணாச்சல் என்றுமே எங்களுடைய பகுதி: சீனாவுக்கு இந்தியா பதில்

post image

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு 'அபத்தமான' முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயரை மாற்ற தொடர்ந்து சீனா முயற்சித்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் வீணான மற்றும் அபத்தமான முயற்சிகள். இத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதையும், என்றுமே அது எங்களுடையதாகவே இருக்கும் என்பதையும், இந்தியாவில் இருந்து பிரிக்கவே முடியாது பகுதி என்பதையும் மாற்றிவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!

மேலும், எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, சீனாவின் வீணான முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம், என்று அவர் கூறினார்.

இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரசேதம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அன்றும், இன்றும், என்றுமே இருக்கும் என்ற மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளின் பெயர்களை மாற்றியுள்ள சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனவும், திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை சீனம், திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி ஜங்னன் எனவும் பெயரிட்டு அழைத்து வருகிறது.

ஏற்கெனவே, 2017 இல் 7 இடங்களின் பெயர்களையும், 2021 இல் 15 இடங்களின் பெயர்களையும் மாற்றியுள்ள சீனா, 2023 இல் 5 மலை முகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் என 11 இடங்களின் பெயர்களை மாற்றி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் பெயர் மாற்ற முயற்சியில் சீனா இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஜி’ லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!

நியூயார்க்: உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தேடுபொறி 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய கூகுள் லோகோவில் பெரியளவிலான மாற்ற... மேலும் பார்க்க

சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி

சின்னதடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை வேகமாக கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் செல்போன் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பா... மேலும் பார்க்க

கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!

திருச்சி: திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி திருவெறும்பூர... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம் ம... மேலும் பார்க்க

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், ... மேலும் பார்க்க

மே 16-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நில... மேலும் பார்க்க