செய்திகள் :

'பெருமை கொள்கிறேன்! ஊக்கம் பெறுகிறேன்!' - தினமணி தலையங்கம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

post image

தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதம் பற்றிய தினமணி தலையங்கம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி 'தமிழகம் பெருமைப்படலாம்' என்ற தலைப்பில் இன்றைய தினமணி தலையங்கம் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் இது குழந்தைகளின் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுவதாகவும் இதற்கு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் குழந்தைகள் நலத் திட்டங்கள் முக்கிய காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,000 பிறப்புகளுக்கு 10.9 சதவீதமாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம், 2023-24-ஆம் ஆண்டு 8.9 சதவீதமாகவும் அதுவே 2024-25-ஆம் ஆண்டில் 8.2 சதவீதமாகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் - சேய் சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்ததில் தமிழகத்தின் பங்கும் இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணியின் இந்தத் தலையங்கத்தைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஒரு தாய்மார் கருவுற்ற காலம் முதல், அவர் பெற்ற குழந்தை பள்ளி, கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் அத்தனை தேவையையும் நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடுவதற்கான பயனும் பாராட்டும் இதோ!

பெருமை கொள்கிறேன்... ஊக்கம் பெறுகிறேன்!!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தினமணியின் தலையங்கம் - தமிழகம் பெருமைப்படலாம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறை!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தையுடன் பயணிக்கும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 1.39 லட்சம் பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெ... மேலும் பார்க்க

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவ... மேலும் பார்க்க

போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அரசு அழைப்பு

போட்டித் தேர்வுக்காக இலவசப் பயிற்சி தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் சேர்ந்து பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதா... மேலும் பார்க்க

ஓடும் பேருந்திலிருந்து குழந்தை தவறிவிழுந்து பலி: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்திலிருந்து 9 மாதக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்... மேலும் பார்க்க

இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் காலமானார்

தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் இன்று (மே 14) காலமானார்.சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய நகர் பகுதியில் வெங்கடாசலம் (வயது 90) வசித்து வந்தார். இதனிடையே வய... மேலும் பார்க்க