செய்திகள் :

கனா தொடர் நாயகிக்கு ஆண் குழுந்தை!

post image

மருத்துவரும் தொடர் நடிகையுமான தர்ஷனா அசோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷனா அசோகன். இதைத் தொடர்ந்து கண்ட நாள் முதல் தொடரில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் நாயகியாக நடித்த கனா தொடர் இவருக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இதன் பிறகு இத்தொடரில் இருந்து விலகுவதாக தர்ஷனா அறிவித்தார்.

கேரளத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான இவர், அதே துறையைச் சேர்ந்த மருத்துவர் அபிஷேக்கை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.

கடந்தாண்டு தர்ஷனா அசோகன் - அபிஷேக்கிற்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

நடிகை தர்ஷனா அசோகன் தாயாகப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை தர்ஷனா அசோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”எங்கள் இதயம் விரிவடைந்துள்ளது. ஒரு சிறிய அதிசயம் நடந்துள்ளது. எங்கள் வாழ்க்கை எல்லையற்ற மகிழ்ச்சிகளால் நிரம்பியுள்ளது. அருமையான மகன் செய்யவுள்ள சாகசங்களைக் காண எங்களால் காத்திருக்க முடியவில்லை ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தர்ஷனா அசோகன் - அபிஷேக்கிற்கு குழந்தை பிறந்துள்ளதையொட்டி ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனியின் மார்கன் வெளியீட்டுத் தேதி!

விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படமான ‘மார்கன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக தனது 12-வது படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தில் நடி... மேலும் பார்க்க

கிஸ் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் கவின் நடிப்பில் உருவான கிஸ் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் ‘கிஸ்’ எனும் புதிய படம் உர... மேலும் பார்க்க

விடாமுயற்சி, வீர தீர சூரன் வெற்றிப்படங்கள் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்

இந்தாண்டு வெளியான திரைப்படங்களின் வெற்றி, தோல்வி குறித்து பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்தாண்டு இதுவரை வெளியான திரைப்படங்களில் ஒரு சில படங்களே ரசிக... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி இழப்பீடு வேண்டும்... சிக்கலில் சந்தானம் படம்!

நடிகர் சந்தானத்தின் புதிய படத்திற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் உருவான ப... மேலும் பார்க்க

காதலியைக் கரம் பிடித்த சுந்தரி தொடர் நடிகர்!

நடிகர் ஜிஷ்ணு மேனன் தனது நீண்ட நாள் காதலி அபியாத்ராவை கரம் பிடித்தார்.சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். எதிர்மறையான பாத்திரத... மேலும் பார்க்க

ராமின் பறந்து போ வெளியீட்டுத் தேதி!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தரமணி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராம் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலியை வைத்து ‘ஏழுகடல் ஏழு... மேலும் பார்க்க