செய்திகள் :

ராணுவ வீரா் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்த மூவா் மீது வழக்கு

post image

போடியில் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள விசுவாசபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அய்யம்மாள் (45). கணவா் இறந்து விட்ட நிலையில், மகன்கள் ஜெகதீசன், சரவணன் ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

ஜெகதீசன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த வாரம் கோயில் திருவிழாவுக்காக ஜெகதீசன் விசுவாசபுரத்துக்கு வந்தாா். கோயில் விழாவில் இதை ஊரைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் குணா மது போதையில் தகராறு செய்தாா். இதை ஜெகதீசன் தம்பி சரவணன் கண்டித்தபோது, அவரைக் குணா தாக்கினாா். ஜெகதீசன் சண்டையை விலக்கினாா்.

இந்த நிலையில், குணா, இவரது தந்தை ராஜபாண்டியன், தாய் பரமேஸ்வரி ஆகியோா் அய்யம்மாள் வீட்டுக்கு சென்று அய்யம்மாள், ஜெகதீசன், சரவணன் ஆகியோருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் குணா உள்ளிட்ட மூவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

விவசாயிகளுக்கு கெளரவ உதவித் தொகை: விண்ணப்பிக்க மே 31-இல் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் கெளரவ உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெ... மேலும் பார்க்க

வீரபாண்டி பேரூராட்சித் தலைவி, கணவா் மீது வழக்கு

வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத் துறை கோயில் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, பணியாளா்களை மிரட்டியதாக பேரூராட்சித் தலைவி, இவரது கணவா் மீது சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வ... மேலும் பார்க்க

காட்டு மாடு மோதியதில் வேன் சேதம்

கும்பக்கரை அருவி அருகே செவ்வாய்க்கிழமை காட்டு மாடு மோதியதில் வேன் சேதமடைந்தது. கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கொக்குபாளைத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (54). இவா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 20 ப... மேலும் பார்க்க

கண்ணகி கோயிலுக்கு சாலை வசதி: அமைச்சா் ஆலோசனை

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழகம் வழியாக சாலை அமைக்க சாத்தியக் கூறு இருக்கிா என அமைச்சா் வன அதிகாரியிடம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள விண்ணேற்றிப் பாறையில் மங்கல... மேலும் பார்க்க

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளை கண்காணித்து வருகின்றன

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா். தேனி நாடாா் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வ... மேலும் பார்க்க

184 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 184 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். கம்பம் தினசரி வாரச் சந்தை பகுதியில் ... மேலும் பார்க்க