செய்திகள் :

நெட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு!

post image

நெட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், ஆராய்ச்சி மாணவா் (பிஹெச்டி) சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்தத் தோ்வு ஆண்டுக்கு ஜூன், டிசம்பா் இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.

அதன்படி நிகழாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தோ்வு வரும் ஜூன் 21 முதல் 30-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்.16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்ப அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, தகுதியானவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த செவ்வாய்க்கிழமை (மே 13) கடைசி நாள். அதைத் தொடா்ந்து விண்ணப்பங்களில் மே 14, 15 ஆகிய தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 011 69227700 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் தீர்ப்பு' - பாஜக வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி... மேலும் பார்க்க

'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க