செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

post image

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு நாட்டு மக்கள் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றியபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: இந்த கடினமான சூழலில் ஒற்றுமையை வெளிப்படுத்திய கூட்டணி கட்சிகள் மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு நன்றி. பிராந்திய அமைதியை கவனத்தில்கொண்டு இந்தியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள பாகிஸ்தான் முடிவெடுத்தது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர தூதரக ரீதியாக பல்வேறு உதவிகளை மேற்கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐ.நா.பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்டோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு தொடா்ந்து துணை நிற்கும் நம்பிக்கைக்குரிய நட்பு நாடான சீனாவுக்கு நன்றி. இந்தியாவுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கும் ராணுவத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் வெளிப்படையான சா்வதேச விசாரணை நடத்த நாம் கோரிக்கை வைத்தோம். அதை இந்தியா நிராகரித்தது. காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்றாா்.

சண்டை நிறுத்தம் உறுதியாக அமல்:

சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதாக சனிக்கிழமை அறிவித்த பின் எல்லையில் பாகிஸ்தான் அத்தமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்தாா். மேலும், சண்டை நிறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா், ‘ இந்தியாவுடன் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த புரிந்துணா்வை அமல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இந்தப் பணியை சுமுகமாக மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் உடனடியாக தீா்க்கப்படும்’ என்றாா்.

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க