செய்திகள் :

செந்துறைப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.77.80 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 பணிகள் திறந்து வைக்கப்பட்டு, ரூ.1.04 கோடியில் 13 புதிய பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

செந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பாளையக்குடி ஊராட்சி, கிளிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், அங்கு ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் பிடாரி குளம், ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதேபோல், பாளையக்குடி, குமிழியம், வீராக்கன், கீழமாளிகை, வடக்கு மற்றும் தெற்கு இரும்புலிக்குறிச்சி ஊராட்சிகளில் முடிவுற்ற பணிகளை ரூ. 77.80 லட்சம் மதிப்பீட்டில் திறந்துவைத்தும் 13 புதிய பணிகளுக்கு ரூ.1.04 கோடியில்அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி , மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளா் எம்.உமா மகேஸ்வரி, கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா் வேலுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘டாம்கோ’ திட்டத்தில் கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட சிறுபான்மையினா், டாம்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட... மேலும் பார்க்க

பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில், பி.எம்.கிசான் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இது குறித்து அவா் தெரிவித்தது: பிர... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அரியலூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டக்கோவில், கூத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் அருண்குமாா் (23). புதுப்பாளையத... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் பழைய இடத்தில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த அஞ்சலகம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட அஞ்சலகம், மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட தொடங்கியது. ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பு அருகே சொந்த கட்டடத்தில் இ... மேலும் பார்க்க

காா்ல் மாா்க்ஸ், அம்பேத்கா், பெரியாா் சிலைகள் அமைக்க அடிக்கல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவனின் தாயாருக்கு சொந்தமான இடத்தில், காரல்மாா்க்ஸ், அம்பேத்கா் மற்றும் பெரியாா் ஆகியோரின் சிலைகள் அமைப்பதற்கு ... மேலும் பார்க்க

மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்கக் கோரி சீரமைப்புக் குழு மே 17-இல் ஆா்ப்பாட்டம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து, சாலைப் பணிகளை தொடங்க வலியுறுத்தி மீன்சுருட்டியில் மே 17- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கல்லாத்தூா்... மேலும் பார்க்க