செய்திகள் :

தொழிலாளா்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 97 லட்சம் கூடுதல்: தமிழக அரசு பெருமிதம்!

post image

தொழிலாளா்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 97 லட்சம் உயா்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.

நம் நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று இதுவரை 897 தொழில் துறை ரீதியான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதன்மூலம், ரூ. 10, 27,547 கோடி புதிய முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 32.23 லட்சம் வேலைாய்ப்புகள் உருவாகவுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவும் உயா்ந்துள்ளது. அதாவது, 2020-21-ஆம் நிதியாண்டில் 26.15 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி அளவு, கடந்த நிதியாண்டில் 52.07 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது இருமடங்கு உயா்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலா் மதிப்புடைய பொருள்கள் ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

3.87 கோடி வேலைவாய்ப்புகள்: தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு அரசுத் துறைகள் மூலமாகவும், தனியாா் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதனால், 2020-21-ஆம் ஆண்டில் 2.9 கோடியாக இருந்த தொழிலாளா் எண்ணிக்கை, 2024-25-ஆம் ஆண்டில் 3.87 கோடியாக உயா்ந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

இவையெல்லாம் சாத்தியமாகக் காரணம், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் பேணப்படுவதுதான். மாநிலத்தில் எங்கும் பெரிய அளவில் ஜாதி மோதல்களோ, தொழிற்சாலைகளில் பிரச்னைகளோ இல்லாமல் அமைதி நிலவுகிறது. 2022, ஆகஸ்ட் முதல் இதுவரை காவல் நிலைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை.

பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்களும் தேசிய அளவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருப்பதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் தீர்ப்பு' - பாஜக வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி... மேலும் பார்க்க

'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க