செய்திகள் :

திருச்செந்தூர்: 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட தாய் கைது; பின்னணி என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பார்வதி.

பெரியசாமி, அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் என்ற மகனும், மூன்று வயதில் ஆதிரா என்ற பெண் குழந்தையும் உள்ளன.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால், ஸ்ரீதேவ் பெரியசாமியின் பெற்றோர் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவில் பெரியசாமியின் மனைவி பார்வதி தனது மகள் ஆதிராவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஆதிரா
கொலை செய்யப்பட்ட ஆதிரா

அப்போது மர்ம நபர் ஒருவர், பெரியசாமியின் வீடு புகுந்து பார்வதியின் நகையைப் பறிக்க முயன்றதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மகள் ஆதிராவைக் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்பட்டது.

பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையைத் தூக்கிச் சென்றபோது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இச்சம்பவத்தில் அதிரடி திருப்பமாகப் பார்வதியிடம் கிடுக்கு பிடி விசாரணை நடத்தியதில், தாய் பார்வதிதான் குழந்தை ஆதிராவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “பார்வதி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து வந்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு தனியார் மனநல மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

திருச்செந்தூர் காவல் நிலையம்
திருச்செந்தூர் காவல் நிலையம்

கடந்த சில நாட்களாகவே அதிகமாக மன நிலை பாதிக்கப்பட்டு கணவருடன் சண்டை போடுவதும், பொருட்களை உடைப்பதுமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில்தான், விளையாட்டு சாமான் கேட்டு அழுத மகள் ஆதிராவைப் பார்வதி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

விசாரணையில் அவரே ஒப்புக் கொண்டுள்ளார். குழந்தை இறந்தது தெரிந்தபிறகு நகைக்காக தன்னை யாரோ மிரட்டியதாகவும், நகையைத் தர மறுத்ததால் குழந்தையைக் கொன்றதாகவும் கூறி நாடகமாடியுள்ளார்” என்றனர்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னை: தாயின் செயினைப் பறித்த மகன்; சிசிடிவியால் வெளிவந்த உண்மை; என்ன நடந்தது?

சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபர் பென்னி. இவரின் மனைவி எல்சி (57).இவர்களின் மகன் எபின் (25). கடந்த 6.5.2025-ம் தேதி கணவனும் மகனும் வெளியில் சென்றுவிட எல... மேலும் பார்க்க

மும்பை: கட்டிலுக்கு அடியில் சடலமாக மீட்கப்பட்ட 63 வயது பெண்; தலைமறைவான பார்ட்னருக்கு வலைவீச்சு

மும்பை கோரேகாவ் மோதிலால் நகரில் வசித்து வந்தவர் ராகினி (63). இவர் பிரதாப் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.பிரதாப்பிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்றன. முதல் மனைவியை முறைப்படி வ... மேலும் பார்க்க

ஆவடி: பைக் திருட்டு வழக்கு; புகாரளித்த பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர்.. சிக்கிய பின்னணி

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வேலை நிமித்தமாக ஆவடி செக்போஸ்ட் பகுதிக்கு தன்னுடைய டூவிலரில் வந்திருக்கிறார். அந்தப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், பின்னர் திரும்பி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ரௌடி மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - துரோகம் செய்ததாக உறவினர் கொடூரக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரௌடி லூவியரசன் (வயது 34). இவரின் மனைவி கீர்த்தனா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், லூவியரசனின் உறவினரான அதே பகுதிய... மேலும் பார்க்க

"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து கைதுசெய்த போலீஸார்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு... மேலும் பார்க்க

குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப... மேலும் பார்க்க