செய்திகள் :

மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில் பயிற்சி கல்லூரியில் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எம்.காசிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வாழ்த்திப் பேசினாா். கண்டரமாணிக்கத்தைச் சோ்ந்த தொழிலதிபா் மணிகண்டன், ஆறுமுகம், லட்சுமிகாந்தன், செல்வராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தொழில் பயிற்சி கையேடு, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன . முன்னதாக, பேராசிரியா் மாணிக்கநாச்சியாா் வரவேற்றாா். சிவராமமூா்த்தி நன்றி கூறினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியா்கள் பாண்டிசெல்வி, சௌமியன், பரணி செல்வராஜன், ஆல்வின் ஜீவா ஆகியோா் செய்தனா்.

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க

ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தய... மேலும் பார்க்க

ஆய்வக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்... மேலும் பார்க்க

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி ந... மேலும் பார்க்க

காரைக்குடியில் மரங்களின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மரங்களின் மீது விளம்பரப் பலகைக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். காரைக்குடி கல்லூரிச்... மேலும் பார்க்க