செய்திகள் :

புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்

post image

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்திய படைகளின் துல்லியமான தாக்குதலில் 3 முக்கிய பயங்கரவாதிகள் - யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ராஃப், முடாசிர் அஹ்மது ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி தெரிவித்தார்.

இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ”கடந்த 1999-ஆம் ஆண்டு கந்தாரில் இந்திய விமான சேவை நிறுவனத்தின் ஐசி 814 விமான கடத்தலில் ஈடுபட்ட யூசுஃப் அஸார் கொல்லப்பட்டதை இந்திய ராணுவம் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்ட யூசுஃப் அஸார், கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலிலும் ஈடுபட்டவராவார்.

முடாசிர் அஹமது, கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூரில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்

ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை!

இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள்ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதியும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான அப்துல் ரௌஃப் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தா... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

நாட்டு மக்களிடம் இன்று இன்றிரவு 8 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஆபரேஷன்... மேலும் பார்க்க

வார்த்தையல்ல.. உணர்ச்சி: உ.பி.யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிட்ட பெற்றோர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவிவந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் "சிந்தூர்" எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் ... மேலும் பார்க்க

பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட பாதுகாப்பு அமைப்பு: ராஜீவ் கயி

புது தில்லி: பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃ... மேலும் பார்க்க

எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம்: வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்

புது தில்லி: தேர்ந்தெடுக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு இந்திய கடற்படை வலிமையானது, எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம் என்று கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைரஸ்... மேலும் பார்க்க

எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது, அலைகள் போல பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்களும் ஆளில்லா சிறு போர் விமானங்களும் இந்திய எல்லையை நோக்கி வந்தன. அவை அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படையால... மேலும் பார்க்க