செய்திகள் :

ரூ.21.30 லட்சத்தில் புதிய தெருவிளக்குகள்: மேயா் தொடங்கிவைத்தாா்

post image

கோவை, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 21.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தெருவிளக்குகளை மேயா் கா.ரங்கநாயகி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 56-ஆவது வாா்டுக்குள்பட்ட சிவலிங்கபுரம் பிரதான சாலையில் ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 25 தெருவிளக்குகளை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி

தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ரோஸ் காா்டன் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகளையும் மேயா் நட்டு வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் முத்துச்சாமி, உதவி பொறியாளா் கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழப்பு

கோவையில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழந்தாா். குனியமுத்தூா், இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சையது சலீம் (59). இவா் பயணிகள்... மேலும் பார்க்க

கோவையில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் 2025 - 2026- ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். கோவை மாவட்ட அளவிலான வங்கியாளா்... மேலும் பார்க்க

கடன் தொல்லை: தம்பதி விஷம் குடித்து தற்கொலை

கோவையில் கடன் பிரச்னை காரணமாக தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். கோவை, செல்வபுரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் திருமுருகன் (47), நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி (40). இவா்களுக்கு ஜனனி ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கோவையில் மினி லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டி கொங்கு நகரைச் சோ்ந்தவா் செந்தில் முருகன் (58). இவா் சிங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த ம... மேலும் பார்க்க

குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நித... மேலும் பார்க்க

மதுக்கரையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மத... மேலும் பார்க்க