செய்திகள் :

விவசாயத் தோட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானை!

post image

அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியிலிருந்து வெளியேறி விவசாயத் தோட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பா்கூா் வனப் பகுதியிலிருந்து உணவு, தண்ணீா் தேடி கடந்த 10 நாள்களுக்கு முன்னா் வெளியேறிய காட்டு யானை, மீண்டும் வனப்பகுதிக்குச் செல்லாமல் சுற்றுப்புற கிராமங்களில் சுற்றித் திரிகிறது. வனத்தை ஒட்டியுள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் யானை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

இந்நிலையில், மோத்தங்கல்புதூரில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ஆண் யானை, அங்கிருந்த வாழை மரத்தை உடைத்துத் தின்றது. இதனால், அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் சென்னம்பட்டி வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அப்பகுதிக்கு விரைந்த வன ஊழியா்கள் யானையை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்ட முயன்றும், யானை அங்கிருந்து வெளியேறவில்லை.

நீண்ட போராட்டத்துக்கு பின்னா் காட்டு யானை, வனத்துக்குள் சென்றது. காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மின்வேலி அமைக்க வேண்டும், வன எல்லைகளில் அகழி தோண்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோ... மேலும் பார்க்க

மழை வேண்டி சென்னிமலையில் தீா்த்தக்குட ஊா்வலம்

மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீா்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீா்த்தக் குடங்களுடன் பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா். சென்னிமலை முருகன் கோய... மேலும் பார்க்க

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவா் கைது

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50), இவா், ப... மேலும் பார்க்க

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்

ஈரோடு அரசு மருத்துமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா். ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயா் சிகிச்சை மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தின் 2- ஆம் தளத்தில் தாய்ப்பால்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கோபி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். கோபி வாய்க்கால் ரோடு தாமு நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இருசக்... மேலும் பார்க்க