செய்திகள் :

தில்லியில் 97 விமான சேவைகள் ரத்து!

post image

புதுதில்லி: போர் நிறுத்தம் இருந்தபோதிலும், தில்லி விமான நிலையத்தில் இன்று மொத்தம் 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சர்வதேச புறப்பாடு விமானம் உள்பட உள்நாட்டில் புறப்படும் 52 விமானங்களும் மற்றும் வந்து சேரும் 44 விமானங்களும் ஆக மொத்தமாக 97 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துகள் இன்று காலை 5.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் குறைந்தது 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல் மற்றும் மாற்று பயண ஏற்பாடுகளுக்கு பயணிகள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: லாரி வாடகை ஏப்ரல் மாதம் சீராக இருந்தது: ஸ்ரீராம் மொபிலிட்டி

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்! - மோடி

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ’ஆபரேஷன் சிந்தூர்’ என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார். “... மேலும் பார்க்க

ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது: சிந்து நதி நீர் குறித்து மோடி!

ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என்று சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.ஜம்... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கும் தலைவணங்குகிறேன்! - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக மக்களிடையே உரையாற்றினார்.மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், “இந்திய ராணுவத்துக்கும், ஆயுதப் படை விஞ்ஞானிகளுக்கும் தலை வணங்குக... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமரின் முதல் உரை!

புது தில்லி; ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் முதல்முறையாக உரையாற்றி வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்... மேலும் பார்க்க

இந்தியா - பாக். ராணுவ தலைமை அதிகாரிகள் பேச்சு முடிவடைந்தது!

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! -ஜாவேத் அக்தர்

அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைக்க நடிகர்கள் தயக்கம் காட்டுவதாகவும், அமலாக்கத் துறைக்குப் பயப்படுவதாலேயே திரைத்துறை சார் பிரபலங்கள் அமைதியாக இருப்பதாகவும் கவிஞர் ஜாவேத் அக்தர் ஜாவேத் அக்தர் தெரிவித்தி... மேலும் பார்க்க