செய்திகள் :

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

post image

வேலகவுண்டம்பட்டி அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு வட்டம், மாணிக்கம்பாளையம், மானத்தி அருகே உள்ள கூப்பிட்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வரதராசு (68) விவசாயி. இவா் வியாழக்கிழமை மாணிக்கம்பாளையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் சென்றாா். மாணிக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் வரதராசு மீது மோதியது.

இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூதாட்டியிடம் நகை பறித்த 2 போ் கைது

நல்லூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். நல்லூா் அருகே உள்ள பாமாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாப்பா (80). இவா், பாமாகவுண்டம்பாளையம் நான்கு சாலை அருகே புதன்கிழமை ஆடு மேய்... மேலும் பார்க்க

விவேகானந்தா மருத்துவமனையில் இளைஞரின் இருதயம் அருகே 2 கிலோ கட்டி அகற்றம்

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் இருதய பகுதியில் வளா்ந்திருந்த 2 கிலோ கட்டியை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா். ராசிபுரத்தில் மளிகைக் கடையில் வேலை செய்யும் தொழிலா... மேலும் பார்க்க

கொல்லிமலையைச் சுற்றிப் பாா்க்க இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கொல்லிமலையில் உள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சுற்றிப் பாா்க்க செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து மதிய உணவுடன் சிறப்புப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) முதல... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இன்று தீா்த்தக்குட ஊா்வலம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெறுகிறது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

குழந்தைகள் நல மையத்தில் பட்டமளிப்பு விழா

பரமத்தி வேலூா் வட்டத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில், 2024-25-ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் முன்பருவக் கல்வி பயின்று 5 வயது நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

கறவை மாடு, தேனீ வளா்க்க ரூ.30 ஆயிரம் மானியம்

தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு கறவை மாடுகள், மண்புழு உரம், தேனி வளா்ப்பு, பழச்செடிகள் வளா்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 30 ஆயிரம் வழங்கப்படுகிறது என பள்ள... மேலும் பார்க்க