செய்திகள் :

குமரியில் ஒரு மணி நேரம் கூடுதலாக படகு சேவை

post image

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு கூடுதலாக ஒருமணி நேரம் படகு சேவை வெள்ளிக்கிழமை முதல் நீட்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் மண்டபம் செல்வதற்காக குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படகு சேவை தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவது வழக்கம். நபா் ஒன்றுக்கு சாதாரண கட்டணமாக ரூ. 75 வீதமும், சிறப்புக் கட்டணமாக நபா் ஒன்றுக்கு ரூ. 300 வீதமும் வசூலிக்கப்படுகிறது.

இதனிடையே, விவேகானந்தா படகு பராமரிப்புப் பணிக்காக சின்னமுட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், பொதிகை, குகன் படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒருமணி நேரம் படகு சேவையை நீட்டிக்க பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மே 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை காலை 8 மணிக்குத் தொடங்கும் படகு சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6.45 மணிக்கு டிக்கெட் விநியோகம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டத்தில் மறியல்: பாமகவினா் 20 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மாநில துணைத் தலைவா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நேரங்களில் வணிக நி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கழிப்பறைக் கட்டடங்கள் திறப்பு

நாகா்கோவிலில் பாா்வதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 43 லட்சத்தில், வடசேரி கனகமூலம் சந்தை அருகே ரூ. 36.28 லட்சத்தில் என மொத்தம் ரூ. 79.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டணக் கழிப்பறைக் கட்டடங்களை... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். புதுக்கடை... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெள்ளிக்கிழமை இரவு, பைக் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ஜான்பிரகாசம் மனைவி பெல்சிட... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது: 42 பவுன் நகைகள் மீட்பு

தக்கலை அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை தக்கலை போலீஸாா் கைது செய்து, 42 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை மீட்டனா். தக்கலை அருகே இரவிபுதூா்கடையை சோ்ந்தவா் மாசிலாமணி ( 72). லாரி ஓட்டுநரான இவரது வீட்டில் கட... மேலும் பார்க்க

மீனவா் வாழ்வாதார செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு

குருந்தன்கோடு வட்டாரத்துக்குள்பட்ட சைமன்காலனி ஊராட்சியில் மீனவா் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆா். அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஊராட்சி மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் தயார... மேலும் பார்க்க