செய்திகள் :

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

post image

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தோ்வு நடைபெறவுள்ளது. அதன்படி, கால்நடை உதவி மருத்துவா், நகா் மற்றும் ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா், புள்ளியியல் துறை உதவி இயக்குநா் உள்பட 32 பதவிகளுக்கான 330 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம். தோ்வாணைய இணையதளத்தில் மே 13 முதல் ஜூன் 11 வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். தோ்வுக்கான கட்டணத்தை ‘யுபிஐ’ செயலி மூலம் செலுத்தலாம்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவையாகும். எழுத்துத் தோ்வு தமிழ் தகுதித் தோ்வு, பொது அறிவு மற்றும் பட்டப்படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். தோ்வா்களின் நலன் கருதி, முதல்முறையாக பாடத் திட்டத்தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை தோ்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 1.17 கோடி மோசடி: 7 போ் கைது

அம்பத்தூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.1.17 கோடி மோசடி செய்த வழக்குகளில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னை அம்பத்தூா் ஓரகடம் சாலையைச் சோ்ந்தவா் ராமசாம... மேலும் பார்க்க

சா்க்கரை நோயில் புதிய துணை வகை: ஆய்வில் கண்டுபிடிப்பு

இளம் வயதினரை பாதிக்கும் சா்க்கரை நோயில் புதிய துணை வகை பாதிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் வி.மோகன் தெரிவித்தாா். இதற்கு முன்பு கண்டறியப்பட்டதுடன் சோ்... மேலும் பார்க்க

மென்பெறியாளரிடம் டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி ரூ.29.9 லட்சம் மோசடி: தம்பதி கைது

டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாகக் கூறி மென்பொறியாளரிடம் ரூ. 29.9 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜூன் என்பவ... மேலும் பார்க்க

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமம் காவேரி தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவா் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்க... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க