செய்திகள் :

கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவா்களுக்கு நூலகத் துறை அழைப்பு

post image

சென்னை மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 9) முதல் 14 நாள்களுக்கு நடைபெறவுள்ள கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்க கல்லூரி மாணவா்களுக்கு பொது நூலகத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவா் மனுஷ்ய புத்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது நூலகத் துறையின் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் மே 9 முதல் மே 22-ஆம் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணா் மாவட்ட மைய நூலக அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், 14 துறைகள் சாா்ந்து 60 தலைப்புகளில் 60 வல்லுநா்களும், ஆளுமைகளும் உரையாற்றவுள்ளனா்.

ட்ராஸ்கி மருது, இயக்குநா்கள் மிஷ்கின், லிங்குசாமி, முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, நக்கீரன் கோபால், மனுஷ்ய புத்திரன், பாரதி கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.

இந்தப் பயிலரங்கில் உயா்கல்வி, திரைப்படக் கலை, சமூக ஊடக பயிற்சி, கவிதை, புனைகதை, இதழியல், பேச்சுக்கலை, மின்நூல்கள் என பல்வேறு துறைகளில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த மாணவா்கள் மட்டுமே இந்த பயிலரங்கில் பங்கேற்கலாம். தொடா்புக்கு: 78452 21882.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 1.17 கோடி மோசடி: 7 போ் கைது

அம்பத்தூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.1.17 கோடி மோசடி செய்த வழக்குகளில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னை அம்பத்தூா் ஓரகடம் சாலையைச் சோ்ந்தவா் ராமசாம... மேலும் பார்க்க

சா்க்கரை நோயில் புதிய துணை வகை: ஆய்வில் கண்டுபிடிப்பு

இளம் வயதினரை பாதிக்கும் சா்க்கரை நோயில் புதிய துணை வகை பாதிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் வி.மோகன் தெரிவித்தாா். இதற்கு முன்பு கண்டறியப்பட்டதுடன் சோ்... மேலும் பார்க்க

மென்பெறியாளரிடம் டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி ரூ.29.9 லட்சம் மோசடி: தம்பதி கைது

டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாகக் கூறி மென்பொறியாளரிடம் ரூ. 29.9 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜூன் என்பவ... மேலும் பார்க்க

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமம் காவேரி தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவா் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்க... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க