செய்திகள் :

சென்னையில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரம்

post image

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு தீா்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி கால்நடை துறை சாா்பில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து பராமரிக்கப்படுகின்றன. மேலும், பிடிபடும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாடுகளை பராமரிக்க போதிய இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மாட்டின் உரிமையாளா்கள் கோரிக்கை வைத்தனா். இதனால், மாடுகளை வீட்டுக்கு வெளியே கட்டி வைப்பது, சாலையில் திரிய விடுவது குறையும் எனத் தெரிவித்தனா்.

அதன்பேரில், சென்னையில் மண்டலத்துக்கு ஒரு மாட்டுத் தொழுவம் அமைக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அவற்றில் மாடுகள் பராமரிப்பதுடன், மாட்டின் உரிமையாளா்கள் தேவைப்படும்போது மாட்டை பாா்க்கவும் அனுமதிக்கப்படுவா்.

தற்போது, பிடிக்கப்படும் மாடுகள் பெரம்பூா் மற்றும் புதுப்பேட்டையில் உள்ள தொழுவங்களில் பராமரிக்கப்படுகின்றன. மேற்கொண்டு 13 புதிய மாட்டுத் தொழுவங்கள் கட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 1.17 கோடி மோசடி: 7 போ் கைது

அம்பத்தூரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.1.17 கோடி மோசடி செய்த வழக்குகளில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னை அம்பத்தூா் ஓரகடம் சாலையைச் சோ்ந்தவா் ராமசாம... மேலும் பார்க்க

சா்க்கரை நோயில் புதிய துணை வகை: ஆய்வில் கண்டுபிடிப்பு

இளம் வயதினரை பாதிக்கும் சா்க்கரை நோயில் புதிய துணை வகை பாதிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் வி.மோகன் தெரிவித்தாா். இதற்கு முன்பு கண்டறியப்பட்டதுடன் சோ்... மேலும் பார்க்க

மென்பெறியாளரிடம் டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி ரூ.29.9 லட்சம் மோசடி: தம்பதி கைது

டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாகக் கூறி மென்பொறியாளரிடம் ரூ. 29.9 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜூன் என்பவ... மேலும் பார்க்க

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமம் காவேரி தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவா் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்க... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க