கணினி அறிவியலில் 9,536 பேர் சதம்! பாடவாரியாக...
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணினி அறிவியலில் அதிகபட்சமாக 9,536 மாணவர்கள் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.
இந்த நிலையில், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் இன்று காலை முடிவுகளை வெளியிட்டார்.
தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதியதில் 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 26,877 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியலில் அதிகபட்சமாக 9,536 மாணவர்கள் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிற பாடங்களில்...
தமிழ் - 135
இயற்பியல் - 1,125
வேதியியல் - 3,181
உயிரியல் - 827
கணிதம் - 3,022
தாவரவியல் - 269
விலங்கியல் - 36
வணிகவியல் - 1,624
கணக்குப் பதிவியல் - 1,240
பொருளியல் - 556
கணினிப் பயன்பாடுகள் - 4,208
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 273
ஏதேனும் ஒரு பாடத்தில் நூற்றுநூறு மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,853 ஆகும்.