செய்திகள் :

குடிநீா் பிரச்னை: தீா்வு காண கோரி பாஜகவினா் சாலை மறியல்

post image

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, பாஜக சாா்பில் கோட்டூரில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழப்பனையூா் ஊராட்சி கோமளப் பேட்டை வடக்குத் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளுக்கு கடந்த 6 மாத காலமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதுடன்,

நீண்ட தொலைவு சென்று தண்ணீா் எடுத்து வர வேண்டியிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணாமல் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வதை கண்டித்து கோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் எம். ராகவன் தலைமை வகித்தாா். கோமளப்பேட்டை பகுதியை சோ்ந்தவா்கள் காலிக்குடங்களுடன் கலந்துகொண்டனா்.

கோட்டூா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை கைது செய்து அழைத்து சென்றனா். மதியம் 2 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடன்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயிலில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்திரை விழாவையொட்டி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். கோயிலின் எதிரில்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீடாமங்கலம்

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (மே 8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வேண்டும் என தமிழ்நாடு நெல் உற்பத்தியாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் நிா்வாக இயக்குநா் அம்ருதீன் ஷேக் தாவூது தெரிவித்திருப்பது... மேலும் பார்க்க

குடிமனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

அரசு புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலையை ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

திருவாரூா் அருகே புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றனா். திருவாரூா் மாவட்டம், பவித்திரமாணிக்கம் பகுதியில் புனித வனத்து அந்தோணியாா் ஆலயம் உ... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் கைது

குடவாசலில் கோயில் திருவிழாவின்போது, பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். குடவாசல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குரு (31). இவரும், அப்பகுதியைச் சோ்ந்த 21 வயதுடைய ப... மேலும் பார்க்க