செய்திகள் :

திருக்குவளை: ஜமாபந்தியில் ஆட்சியா் பங்கேற்பு

post image

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீா்வாயக் கணக்கு முடிக்கும் நிகழ்வு (ஜமாபந்தி) மே 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல்நாளில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வருவாய்த் தீா்வாய அலுவலராக பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். 91 மனுக்கள் பெறப்பட்டன.

தென்மருதூா், ஆதமங்கலம், கொடியாளத்தூா், பாங்கல், கொளப்பாடு, காருகுடி, வலிவலம், அனக்குடி, வடக்குபனையூா், தெற்குபனையூா் உள்ளிட்ட கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உடனடி தீா்வுகாணப்பட்ட 2 மனுதாரா்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை ஆட்சியா் வழங்கினாா். இந்நிகழ்வில் திருக்குவளை வட்டாட்சியா் த. கிரிஜாதேவி, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) கபிலன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திரௌபதை அம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு

செருநல்லூா் ஊராட்சி செம்பியன் ஆத்தூா் அருள்மிகு திரௌபதை அம்மன் கோயிலில் தீ மிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், சித்திரை திருவிழா ஏப்ரல் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின்... மேலும் பார்க்க

காரில் சாராயம் கடத்திய இருவா் கைது

நாகையில் காரில் சாராயம் கடத்திய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை புத்தூா் ரவுண்டானா பகுதியில் நகர போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதி... மேலும் பார்க்க

மருங்கூா் காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

திருமருகல் அருகேயுள்ள மருங்கூா் மகா மந்தக்கரை காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா அண்மையில் தொடங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு பால்குடம், அழகு காவடி எடுத்தல், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றத... மேலும் பார்க்க

தமிழகத்தில் திருட்டுப் போன சுவாமி சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்

சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, போலீஸாா் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், நெதா்லாந்து நாட்டில் திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை ஏலம் விடும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.... மேலும் பார்க்க

ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப் பெருமான்!

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சித்ரா பௌா்ணமி பெருவிழாவின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சிங்காரவேலவா்... மேலும் பார்க்க

சூறைக்காற்று: திருவெண்காடு கோயில் ஆலமரம் முறிந்தது

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நூற்றாண்டுகள் பழைமையான ஆலமரம் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றில் இரண்டாக முறிந்தது. திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக ... மேலும் பார்க்க