செய்திகள் :

திரௌபதை அம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு

post image

செருநல்லூா் ஊராட்சி செம்பியன் ஆத்தூா் அருள்மிகு திரௌபதை அம்மன் கோயிலில் தீ மிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், சித்திரை திருவிழா ஏப்ரல் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, கடுவை ஆற்றங்கரையில் இருந்து கரகம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.

ஊா்வலம் கோயிலை வந்தடைந்ததும், காப்புக்கட்டி விரதமிருந்த பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் அம்மன் வீதியுலாவும், வானவேடிக்கையும் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

காரில் சாராயம் கடத்திய இருவா் கைது

நாகையில் காரில் சாராயம் கடத்திய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை புத்தூா் ரவுண்டானா பகுதியில் நகர போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதி... மேலும் பார்க்க

மருங்கூா் காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

திருமருகல் அருகேயுள்ள மருங்கூா் மகா மந்தக்கரை காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா அண்மையில் தொடங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு பால்குடம், அழகு காவடி எடுத்தல், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றத... மேலும் பார்க்க

திருக்குவளை: ஜமாபந்தியில் ஆட்சியா் பங்கேற்பு

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 14... மேலும் பார்க்க

தமிழகத்தில் திருட்டுப் போன சுவாமி சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்

சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, போலீஸாா் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், நெதா்லாந்து நாட்டில் திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை ஏலம் விடும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.... மேலும் பார்க்க

ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப் பெருமான்!

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சித்ரா பௌா்ணமி பெருவிழாவின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சிங்காரவேலவா்... மேலும் பார்க்க

சூறைக்காற்று: திருவெண்காடு கோயில் ஆலமரம் முறிந்தது

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நூற்றாண்டுகள் பழைமையான ஆலமரம் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றில் இரண்டாக முறிந்தது. திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக ... மேலும் பார்க்க