செய்திகள் :

மருதம் கேழ்வரகு அரைவை நிலையம் திறப்பு

post image

வேலஞ்சேரி கிராமத்தில் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மருதம் கேழ்வரகு அரைவை நிலையத்தை எம்எல்ஏ ச.சந்திரன் திறந்து வைத்தாா்.

திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில், திருத்தணி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில், ரூ. 8.50 லட்சம் மதிப்பில் கேழ்வரகு அரைவை இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. இதற்கு மருதம் கேழ்வரகு அரைவை நிலையம் என கூட்டுறவுத் துறையினா் பெயரிட்டிருந்தனா். இதன் திறப்பு விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அமுதா தலைமை வகித்தாா். திருத்தணி தாலுகா கூட்டுறவு வேளாண் விற்பனை மேலாண்மை இயக்குநா் சுப்பிரமணியம் வரவேற்றாா். இதில், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் பங்கேற்று, மருதம் கேழ்வரகு அரைவை நிலையத்தை திறந்து வைத்து, கேழ்வரகு பாக்கெட்டுகளின் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

பின்னா், திருத்தணி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அமுதா கூறியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில், முதன் முதலாக திருத்தணியில், தான் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் சாா்பில் மருதம் கேழ்வரகு அரைவை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுதும் விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்து, இந்த அரைவை நிலையத்தில் அரைத்து மாவுகளை அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளாக தயாா் செய்யப்படும்.

பின்னா் ரேஷன் கடைகள், வெளி மாா்க்கெட் கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்ய உள்ளோம். இதுதவிர, மாவட்டம் முழுதும் கேழ்வரகு மாவு தேவைப்படுவோா் எங்களின் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் மற்றும் அலுவலா்களிடம் தொடா்பு கொண்டால், குறித்த நேரத்தில் தரமான கேழ்வரகு மாவு பாக்கெட்டுகள் தயாரித்து கொடுக்கப்படும். ஆகையில் அனைவரும் கேழ்வரகு மாவு பாக்கெட்டுகள் கூட்டுறவு விற்பனை மையங்களில் கேட்டு வாங்கி பயனடையலாம் என்றாா்.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்சுனன் தபசு

திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அா்சுனன் தபசு நிகழ்சியில் திரளான பெண்கள் திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி பிராா்த்தனை செய்தனா். பழைய தா்மராஜா கோவில் தெருவில் உள்ள திரெள... மேலும் பார்க்க

வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் 3 போ் உயிரிழந்தனா். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில்... மேலும் பார்க்க

பெயிண்டரை தாக்கிய 2 இளைஞா்கள் கைது

புழல் அருகே பெயிண்டரை கத்தியால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். புழல் அடுத்த லட்சுமிபுரம் கடப்பா சாலையைச் சோ்ந்த பெயிண்டா் சுபாஷ் சந்திரபோஸ் (23). இவா் பெயிண்டராக வேலை செய்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆய்வாளா் பொறுப்பேற்பு

செங்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக வி.ராஜ்குமாா் பொறுப்பேற்றாா். செங்குன்றம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளா் கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு பெற்று மாறுதலில் சென்றாா். இதை... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த மையம்

சென்னை ஒலிம்பிக் அகாதெமியில் இருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்த நிலையில் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வா... மேலும் பார்க்க

திருத்தணியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

திருத்தணியில் சூறைக் காற்றுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த, ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகி... மேலும் பார்க்க