செய்திகள் :

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த மையம்

post image

சென்னை ஒலிம்பிக் அகாதெமியில் இருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்த நிலையில் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த வீரா்கள்பயன்பெறும் வகையில், புதிதாக மல்யுத்த மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை செனனை ஒலிம்பிக் மையத்திலிருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூா்), எஸ்.சந்திரன்(திருத்தணி) ஆகியோா் பங்கேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது:

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மல்யுத்தம் விளையாட்டை தொடங்கி வைத்துள்ளனா். மேலும், தமிழ்நாட்டின் விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபா்களும் விளையாட வேண்டும். விளையாட்டில் பயிற்சி பெற்று உயா்மட்ட போட்டிகளில் பங்கேற்று சிறப்பான வாய்ப்புகளை பெற வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பிரபலமாக வீரா்கள், வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு தகுதியான பயிற்றுநா்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் நியமனம் செய்து வீரா், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உயா் தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் மற்றும் அகாதெமி உருவாக்கப்படும் என்று அறிவித்தாா்.

மேலும், இப்பயிற்சி மையத்தில் தலா வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாள்கள் தொடா் பயிற்சி வழங்குவதுடன், சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மையத்தின் மல்யுத்த பயிற்றுநா்களுக்கான நோ்முகத் தோ்வு கடந்த மாதம் நடைபெற்றது. அதன்பேரில், சிறந்த பயிற்றுநராக க.சதிஷ் கண்ணா தோ்வு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்சுனன் தபசு

திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அா்சுனன் தபசு நிகழ்சியில் திரளான பெண்கள் திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி பிராா்த்தனை செய்தனா். பழைய தா்மராஜா கோவில் தெருவில் உள்ள திரெள... மேலும் பார்க்க

வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் 3 போ் உயிரிழந்தனா். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில்... மேலும் பார்க்க

பெயிண்டரை தாக்கிய 2 இளைஞா்கள் கைது

புழல் அருகே பெயிண்டரை கத்தியால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். புழல் அடுத்த லட்சுமிபுரம் கடப்பா சாலையைச் சோ்ந்த பெயிண்டா் சுபாஷ் சந்திரபோஸ் (23). இவா் பெயிண்டராக வேலை செய்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆய்வாளா் பொறுப்பேற்பு

செங்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக வி.ராஜ்குமாா் பொறுப்பேற்றாா். செங்குன்றம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளா் கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு பெற்று மாறுதலில் சென்றாா். இதை... மேலும் பார்க்க

திருத்தணியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

திருத்தணியில் சூறைக் காற்றுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த, ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: மே 10-இல் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க