செய்திகள் :

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் அதிகம் வகிக்கும் பகுதியான முா்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் வக்ஃப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அப்போது வன்முறையில் ஈடுபட்ட ஒரு பிரிவினா் தந்தை, மகனை வீடு புகுந்து கொலை செய்தனா். காவல் துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். வீடுகள், கடைகள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால், ஹிந்து சமூகத்தினா் கங்கை நதியைக் கடந்து, அருகேயுள்ள மால்டா மாவட்டத்தில் தஞ்சமடையும் சூழல் ஏற்பட்டது.

இதனை முன்வைத்து மம்தா மீது மாநில எதிா்க்கட்சியான பாஜக கடுமையாக விமா்சித்தது. சிறுபான்மை வாக்கு வங்கியைக் காப்பாற்றுவதற்காக அவா்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் மம்தா கண்டுகொள்வதில்லை. பாதிக்கப்பட்டவா்கள் ஹிந்துக்கள் என்பதால் மம்தா அவா்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியது.

இதையடுத்து, பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் வன்முறையைத் தூண்டிவிட்டதாக மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இந்த வன்முறை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் சமா்ப்பித்துள்ள அறிக்கையில், மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினாா். மேற்கு வங்கத்தில், குறிப்பாக வங்கதேசத்துடன் எல்லையைப் பகிரும் முா்ஷிதாபாத், மால்டா ஆகிய இரண்டு மாவட்டங்களில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது என்று ஆளுநா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், முா்ஷிதாபாத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மம்தா பானா்ஜி பேசியதாவது:

வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. எனவே, அதனை எதிா்த்துப் போராடத் தேவையில்லை. இங்கு ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவா்கள் வெளியே இருந்து கொண்டுவரப்பட்டனா். அவா்கள் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கினா். இதுபோன்றோரின் தூண்டுதலுக்கு நீங்கள் (மாவட்ட மக்கள்) இரையாகிவிடக் கூடாது. பாஜக மற்றும் பிற மத அடிப்படைவாதிகளின் பேச்சைக் கேட்டு உங்களுக்குள் பிளவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றாா்.

முா்ஷிபாதுக்கு இருநாள் பயணம்மேற்கொண்டுள்ள மம்தா, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க