செய்திகள் :

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

post image

நமது நிருபர்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014-இல் அளித்த தீர்ப்பை செயல்படுத்த அனுமதிக்காமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அணையின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையைப் பலப்படுத்துவது, பராமரிப்பது தொடர்பான விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையைப் பழுதுபார்த்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கு கேரள அரசுத் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் இந்த விவகாரத்தை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, "இரு மாநிலங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஒன்றுக்கொன்று நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, பொருத்தமான அமர்வின் முன் பட்டியலிடுவதற்காக தலைமை நீதிபதியின் முன் இந்த விவகாரத்தை வைக்க உத்தரவிடப்படுகிறது' என்று கூறியிருந்தது.

மேலும், தமிழக அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், திபாங்கர் தத்தா, என்.கோடீஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா மற்றும் தனி நபர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அணையின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு புதிய அணை கட்டவும், அணையை மறுமதிப்பீடு செய்யவும் வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாஃப்டே, ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராகி முன்வைத்த வாதங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அணை விவகாரத்தை கையாள மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு இன்று வரை அனுமதிக்கவில்லை. அக்குழுவின் முடிவு செயல்படுத்தப்படாமல் உள்ளது.

பராமரிப்புப் பணிகளை தமிழகம் மேற்கொள்ளவிடாமல் முட்டுக்கட்டைபோட்டுவிட்டு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று கேரள அரசு கூறி வருகிறது என்றனர்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "பேபி அணையைப் பலப்படுத்துவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்துள்ளது' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, "இந்த விவகாரத்தில் மேற்பார்வைக் குழு தாக்கல் செய்துள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்' என்று கூறி வழக்கு விசாரணையை மே 19-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனர்.

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்ச... மேலும் பார்க்க

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!

இந்தியா மற்றும் பிரேஸிலில் முதலீடு மோசடி தொடர்பான முகநூல் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில், மார்ச் மாதத்தில் மட்டும் முதலீடு மோசடி தொடர்பான முகநூலின் 23,000-க்கும... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக... மேலும் பார்க்க