செய்திகள் :

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

post image

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று மாலை நடைபெற்ற போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் சூழலின்போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் இன்று (மே 7) மாலை பெரும்பாலான மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா பதில் தாக்குதலை நடத்திய நிலையில், போர் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

தலைநகர் தில்லி, மும்பை, சென்னை, புணே போன்ற பெரு நகரங்களிலும் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லையோர மாநிலங்களிலும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர்

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தளத்தின் பைசாரன் பள்ளத்தாக்கில் ஏப். 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 13 நாள்கள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

நாட்டில் 21 விமான நிலையங்கள் மே 10 வரை மூடல்!

நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மே 10 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத மு... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை: உச்சநீதிமன்றக் குழுவின் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லி உ... மேலும் பார்க்க

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

ராணுவ ரயில் விவரங்களை சேகரிக்க முயலும் பாகிஸ்தான் உளவுத்துறை -ஊழியா்களுக்கு முன்னெச்சரிக்கை

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடா்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ -பெயா் சூட்டிய பிரதமா் மோடி

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் எதிா்த் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்ததாக அதிக... மேலும் பார்க்க

‘எங்களின் நம்பிக்கையைப் பிரதமா் காப்பாற்றியுள்ளாா்’ -பஹல்காமில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் கருத்து

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா்’ என்று பஹல்காம் தாக்குதலில் உய... மேலும் பார்க்க