செய்திகள் :

Operation Sindoor: "இரு நாடுகளையும் நன்கு தெரியும்; அவர்கள்..." - இந்தியா - பாக். குறித்து ட்ரம்ப்

post image

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று முன்தினம் (அமெரிக்க நேரப்படி), அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இது ஒரு அவமானம்" என்று பதிலளித்திருந்தார்.

மீண்டும், நேற்று ட்ரம்பிடம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து கேட்கப்பட்டது.

"இது மிகவும் மோசமானது. நான் இரு நாடுகளுடனும் நல்ல உறவில் இருக்கிறேன். எனக்கு இரு நாடுகளையும் நன்கு தெரியும். அவர்கள் இதைச் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

இருவருமே இதை நிறுத்த வேண்டும்.பழிக்குப் பழி நடந்துவிட்டது. இப்போது அவர்களால் இதை நிறுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

trump
donald trump - டொனால்ட் ட்ரம்ப்

இரு நாடுகளுடனும் இணைந்து நாம் நன்கு செயல்பட்டு வருகிறோம். என்னால் எதாவது முடிந்தால், நிச்சயம் அதை நான் செய்வேன்" என்று பேசியுள்ளார் ட்ரம்ப்.

கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் ட்ரம்ப். மேலும், 'இந்தியாவுடன் இருக்கிறோம்' என்று ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, 'இது ஒரு அவமானம். சீக்கிரம் இது முடியும் என்று நம்புகிறேன்' என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

"தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் இன்னும் இருக்கின்றன; ஆனால்..." - முத்தரசன் சொல்வது என்ன?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவிற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், "ஏப்ரல் 22ம்... மேலும் பார்க்க

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க