செய்திகள் :

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.

இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...

  • ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிரதேசங்களில் எந்தத் தாக்குதல்களையும் முன்னெடுக்கவில்லை. ஆனால், நேற்று பாகிஸ்தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள பகுதிகளில் தாக்குதலைத் தொடங்கியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தப் பகுதிகளில் தற்போது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான்.

  • நேற்று இரவு ஜம்மு பகுதியில் 8 ஏவுகணைகளைப் பாகிஸ்தான் ஏவியது. ஆனால், அந்த 8 ஏவுகணைகளையும் இந்தியாவின் ராணுவம் அதன் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தகர்த்தெறிந்தது.

பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி
  • ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் பகுதிகளில் உள்ள இந்தியாவின் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது பாகிஸ்தான். அவை அனைத்தும் தடுக்கப்பட்டுவிட்டன என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பாகிஸ்தானுக்கு தக்க பதிலடிகளை ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் மூலம் தந்து வருகிறது இந்தியா.

  • தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்தியாவின் கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

  • இந்தியாவில் உள்ள ஜம்மு, பதான்கோட், ஸ்ரீநகர் உள்ளிட்ட 24 முக்கிய விமான நிலையங்களை மூடியுள்ளது இந்தியா. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • பாகிஸ்தானுக்கு உதவ துருக்கி தனது சரக்கு விமானத்தைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

  • இந்தியாவின் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்தியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  • இதுவரை இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாது... மேலும் பார்க்க

India - Pakistan : `சீனா ஜெட்டை இந்தியா பயன்படுத்தியதா?' - பாகிஸ்தான் கேள்வியும் சீனாவின் பதிலும்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இந்தியா புதன்கிழமை ஏவுகணைகள் மூலம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயாரில் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் மீத... மேலும் பார்க்க